Powered By Blogger

Wednesday, September 14, 2011

வரட்சி

குருதியைக்
காணக் கிடைப்பதில்லை
என் இதயத்தில்
எங்கு தொட்டாலும்
கற்களும் முட்களுமாய்
என் கல்லறைச் சுவர்களில்
குப்பை மேனிச் செடிகள்
வறண்டு கிடக்கின்றன
குற்றுயிராய்த் தவித்த என்
பூக்காடுகள் இன்று
புட்காடுகளாய்
நாகதாளி ஒன்று
நாவறண்டு நிற்கின்றது
பழத்தை விற்றுவிட்டுப்
பச்சைத் தண்ணீர் கடன் வாங்க !!!!

No comments:

Post a Comment