Powered By Blogger

Saturday, September 24, 2011

முள்ளில்லா ரோஜாவே கவிதைத் தொகுப்பு

மென்மையான மலர்
ரோஜாவாம்
உன்னைத் தொடாமல்
உணர்ந்திட்டேன்
நீ எவ்வளவு மென்மையானவள் என

முள்ளில்லா ரோஜாவே கவிதைத் தொகுப்பு

ரோஜா புன்னகைத்தால்
எப்படி இருக்கும்
உன் சிரிப்பை கண்டதும்  தெரிந்தது
உலக அதிசயத்தில்
முதன்மையானதாய் இருக்குமென

முள்ளில்லா ரோஜாவே கவிதைத் தொகுப்பு

ரோஜாக் கூட்டங்களே
கொள்ளை அழகென்றால்
ரோஜாத்  தோட்டம்  நீ
எப்படி இருப்பாய்?

முள்ளில்லா ரோஜாவே கவிதைத் தொகுப்பு

ரோஜாக்கள்
பேசிக் கொள்ளாதாம்
யார் சொன்னது
நீ அடிக்கடி மௌனமாய்
பேசிக்கொள்கிறாயே !!!

முள்ளில்லா ரோஜாவே கவிதைத் தொகுப்பு

காதலின் சின்னத்தில் ஒன்று
 ரோஜாவாம்
உன்னை பார்த்ததும் நினைக்க தோன்றியது
காதலுக்கு  இவ்வளவு
அழகிய சின்னமா என

முள்ளில்லா ரோஜாவே கவிதைத் தொகுப்பு

ரோஜாக்களில் 
பிழிந்தெடுக்க பட்டது பன்னீராம்
உன்னில்
 பிழிந்தெடுக்கப் பட்டது
அப்பட்டமில்லா அழகு

முள்ளில்லா ரோஜாவே கவிதைத் தொகுப்பு

வெள்ளை ரோஜாக்கள்
சிவப்பதில்லை  என்பது பொய்
நீ  வெட்கப்பட்டுச்
சிவந்து விடுகிறாயே!!!