Powered By Blogger

Friday, September 9, 2011

வரட்சியாள்

பருவம் மாறிடும் -அவள் பார்வையால்
எனக்கென்றும்  மாறிடாது கோடை
வாடைக் காற்று வசந்தம்
அவள் மூச்சுக் காற்று வெப்பம்
ஈர இதயம் வறண்டதால்
அதன் வெடிப்பினுள் புகுந்தவள்
மாறாது எரிந்து கொள்வாள்
மாரியிலும் எரித்துக் கொல்வாள்
அவள் பெண்ணல்ல
என் வரட்சியாள் ......

No comments:

Post a Comment