Powered By Blogger

Wednesday, September 14, 2011

நீ !

வெட்டை வெளியே தனித்து
நின்ற நிலவை
வெட்கப்பட்டு
 சிரிக்க வைத்தவள் நீ !!

உன்னைக் காணும் பொழுதுகள்
காலையாகவோ
இரவாயோ இருப்பதில்லை
காதலாயும்
இன்பமாயும்  இருக்கின்றன

குரங்கயிருந்த மனிதனை
கூர்ப்படையச் செய்தவள் நீ
குறும்பாய் திரியும் சிறுவனை
மூப்படையச்  செய்தவளும் நீ

நீ தொட்டுச் சென்ற
வேப்பங்காய்கள் இனிப்பதும்
நீ விடுச் சென்ற
வெல்லக் கட்டிகள் கசப்பதும் நிஜம்

இது ஏனோ தெரியவில்லை
என் இதயத்தின்
இரத்த நாளங்களில் எல்லாம்
குருதி நகர்வதற்கு பதில்
நகர்பவள் நீ மட்டும் தான்  !!!


No comments:

Post a Comment