Powered By Blogger

Monday, August 9, 2010

உயிரற்றது உயிரியல்

இதயத்தில் நான்கறைகளின்றி
உன்னை மட்டும் சுமக்கும் ஓரறை
இருப்பதினால்
உயிரியல் இன்று பொய்யாகிப்போனது

சாதி மதம் இனம் என்ற
பௌதீக காரணிகள் நம் காதலை
கொன்றதால்
பௌதிகவியல் எனக்கு வெறுப்பாய் போனது

நம் இருவருக்குமிருந்த அன்பெனும்
இரசாயனம்
இன்று அந்தரத்தில் நிற்பதனால்
இரசாயனவியலின் நிலை கவலைக்கிடம்

மொத்தத்தில் நம் காதல்
கிளித்தெறியப்பட்ட கொப்பிகளாகி
தொடர்ந்து படிக்க(காதலிக்க) இயலாமல்
என் உயிரியல் பாடமின்று உயிரற்று கிடக்கிறது

No comments:

Post a Comment